ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயம்

நிறுவனர்கள்

தரம் 01 மாணவர்கள் வருகை

hs7.png
hs7.png

 

இப் பாடசாலையின் வரலாற்றை நோக்கும்போது இற்றைக்கு சுமார் ஐந்து தசாப்த காலங்களுக்கு முன்னர் அதாவது, 1961.05.04 இல் தற்காலிகமான ஓலைக் குடிசையொன்றில் திரு.சி. இளையதம்பி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. மட்/ஐயன்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் ஆண், பெண் மாணவர்கள் தலா 15 பேருடன் ஆரம்பப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது திரு.சு.வேதாரணியம் என்பவர் அதிபராக் கடமையாற்றியுள்ளார்.